ஆலமரத்தடி அரட்டை
இன்றுவழமைபோல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!
’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’
குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?
|