வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியமா? மிக நீண்ட....நாட்களின் பின்னர் ஒரு புதுப் பதிவினூடே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.இப்பொழுது தமிழகம் முழுவதும் “அம்மா” மயம், அம்மா உணவகத்தில் ஆரம்பித்த புரட்சி, அம்மா டாஸ்க்குமார்க்கு வரை பரவி, தற்போது அம்மா விபச்சார விடுதி ஆரம்பிக்கும் படலத்தை எட்டியிருக்கிறது. அடப் போங்க மக்கா, என்னங்க திடீரென்று ஒரு கொடூரப் பார்வையோடு என்னயப் பார்க்கிறீங்க?
சத்தியமா நெசந்தானுங்கோ. அம்மா உணவகத்தின் பலன்... நிச்சயமாக வரவேற்க வேண்டிய விடயம், ஆனால் அம்மா டாஸ்மாக்கின் பலன்.. பல குடும்பங்களுள் களேபரங்கள், நாளாந்த விரிசல்கள். இதெல்லாம் இப்படியே போய்க்கிட்டு இருந்தா எங்கே போய் முடியும்? இறுதியில் நாம் எல்லோரும் ஏமாளிகள் எனும் வகையில் அம்மா விபச்சார விடுதித் திறப்பு விழாவில் தானே முடியுமுங்க..
நமக்குள் மாற்றம் வேண்டும், நம்மை அறியாமலே ஆட்சியில் உள்ளோர் மக்களிற்கான நலத் திட்டம் எனச் சொல்லி பல கோடிகளைத் தம் வீட்டுக் கோடியினுள் பதுக்குகிறார்கள்.. அறிந்த வரை பல உறவுகள் வருந்துகிறார்கள் தமிழகத்தில். நாடு இன்னும் வேகமாக அபிவிருத்திப் பாதையில் செல்லாதா என ஏங்குகிறார்கள். மாமனிதர் அப்துல்கலாம் ஐயாவின் கனவு இன்னும் ஐந்து வருடங்களுள் நிறைவேறாதா எனும் ஏக்கமே பலரிடமும் இருக்கிறது.
நமக்குள் மாற்றம் வேண்டும், நம்மை அறியாமலே ஆட்சியில் உள்ளோர் மக்களிற்கான நலத் திட்டம் எனச் சொல்லி பல கோடிகளைத் தம் வீட்டுக் கோடியினுள் பதுக்குகிறார்கள்.. அறிந்த வரை பல உறவுகள் வருந்துகிறார்கள் தமிழகத்தில். நாடு இன்னும் வேகமாக அபிவிருத்திப் பாதையில் செல்லாதா என ஏங்குகிறார்கள். மாமனிதர் அப்துல்கலாம் ஐயாவின் கனவு இன்னும் ஐந்து வருடங்களுள் நிறைவேறாதா எனும் ஏக்கமே பலரிடமும் இருக்கிறது.
எல்லோரிடமும் வாட்ஸ் அப் முதல், அத்தனை ஷோஸியல் நெட் ஒர்க்கும் இருக்கிறது. நமக்கான மாற்றம் வேண்டின் சமூக வலைத்தளங்களில் புரட்சியை ஏற்படுத்தலாம். புதிய பாதையை வேண்டி நமது கடமைகளை ஆரம்பிக்கலாம். பூனைக்கு மணி கட்டுவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.
|
1 Comments:
முதலில் டாஸ்மாக் கடைகளை மூடினால், குடிப்பவனும் மற்றும் அவன் குடும்பத்தினரும் ஓரளவுக்கு உடல் நலம் மேம்படுவார்கள். பிறகு இந்த திட்டம் அமுல்படுத்தபடலாம். இல்லை என்றால், ஒரு கோடியில் டாஸ்மாக் கடை. மறு கோடியில் இந்த பரிசோதனை. கொஞ்சம் வேடிக்கையாக இல்லை??
Post a Comment