யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
அனைவருக்கும் வணக்கமுங்க; யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடாநாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில்; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே! (நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது ஈழச் சிசுவைக் கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம் தொடரின் இரண்டாவது பாகமாகும். இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)
|