ஆதாரங்களுடன் கூடிய அதிர்ச்சியூட்டும் விழிப்புணர்வுப் பதிவு:
வலைப் பதிவின் ஊடாக அறிமுகமான சக நண்பி ஒருவரின் பதிவுகளைச் சமீப காலமாக காண முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் அவருடைய முகப் புத்தகத்திற்கு ஒரு குறுந் தகவல் அனுப்பிப் பார்த்தேன். தான் இப்போது ப்ளாக் எழுதுவதனை நிறுத்தி விட்டு புதிதாக ஒரு சாட் ரூம் திறந்திருப்பதாக பதில் அனுப்பி, என்னையும் விரும்பினால் சாட் ரூமுக்கு வருமாறு அழைத்தார் அந்த நண்பி. அட இது என்ன சாட் ரூம் அதுவும், தமிழ் பெயரில் சாட் ரூம் என்று விழியினை உருட்டிக் கொண்டிருந்த எனக்கு அந்த நண்பியின் ஸ்கைப் (Skype) முகவரிக்கு அழைப்பினை மேற் கொண்டால் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம் எனும் ஆவல் மேலெழ அவரின் ஸ்கைப்பிற்கு அழைப்பினை மேற்கொண்டேன்.
நம்மாளுங்க "காஞ்ச மாடு - - - - - - " என்று ஒரு பழ மொழி சொல்வார்களே! அது போன்று வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்கள்து ஆட்சியின் கீழ் கலாச்சார சீரழிவேதுமற்ற பகுதியில் வாழ்ந்த காரணத்தினால் சாட் ரூம் பற்றிய அறிவுகள் கொஞ்சம் குறைவாக இருக்கிறதே என எண்ணி இந்த விடயங்களையும் அறியும் ஆவலோடு நண்பியுடன் பேச ஆரம்பித்தேன். இனி இந்த நண்பியின் பெயரை ஜூலியா என்று வைத்துக் கொள்வோமா? ஜூலியாவிடம் சாட் ரூம் பற்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவல் எனக்குள் எழ என் கேள்விக் கணைகளைத் தொடுத்தேன். "என்னமோ போங்க நிரூ! நீங்க இந்த மாதிரி விடயங்களை எடுத்து எழுதி ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினால் பல பெண்களின் வாழ்க்கையினைச் சீரழிக்கப் போகிறீர்களா?" என்று புலம்பினார்.
கொஞ்சம் நிதானமாக கட்டுரையினை நீ வரைய வேண்டும் எனக் கூறி; "நீ என்ன எழுதினாலும் அடுத்த நிமிடமே, சூடு சுறணையற்ற நாதாரி இணையத் தளங்கள் சில உன் கட்டுரையினையும் வெட்கம் மானமின்றி கொப்பி பேஸ்ட் பண்ணிப் போட்டுச் சுய இன்பம் கண்டு மகிழப் போகிறார்களே! இதனால் உனக்கு என்ன பயன் என்று கேட்டவரிடம்;
"பல பெண்களாவது இனிமேல் இந்த வலையில் விழுவதிலிருந்து தப்பிப்பார்கள்" என்றதும் என் வழிக்கு வந்து, பேச்சைத் தொடங்கினார் ஜூலியா. ஏலவே பல சாட் ரூம்களில் பெண்களின் வாழ்க்கையினைப் படு குழியில் தள்ளும் நோக்கில் பல கும்பல்கள் தம் கை வரிசையினைக் காட்டி வருகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் அண்மையில் தமிழ்------- எனும் பெயரில் பெண்களுக்கும், அங்கே சாட் பண்ணும் ஆண்களுக்கும் தனி நபர் உரிமையினைப் பாதுகாக்கும் வகையில் தன் சாட் ரூம் அமைய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான் சாட் ரூம் ஆரம்பித்ததாக சொன்னார் ஜூலியா. "சாட் ரூமுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க என்று? கேட்டேன்." "ஆண்களும் பெண்களும் வருவார்கள்! அதிலும் குறிப்பாக திருமணமான பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும் தம் கைங்கரியத்தினை அரங்கேற்றும் நோக்குடனும், வெளியூரில் கணவன் உள்ள பெண்களும் தம் பொழுது போக்கிற்காகவும் சாட் ரூமை நாடுவார்கள்" என்று சொன்னார் ஜூலியா.
சூடு சுறணையின்றி நிரூபனின் ப்ளாக்கிலிருந்து காப்பி பண்ணிய பதிவு!
கலியாணம் கட்ட வேண்டும் எனும் ஆவலில் இருந்த நான் இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் பம்மிக் கொண்டா இருப்பேன்? "அப்படீன்னா சாட் ரூமில் பிகருங்க மாட்டுமா?" என ஒரு கேள்வி கேட்டேன்.
"ஆம் நிச்சயமாக மாட்டும்! நீ பேசுறதைப் பொறுத்து!" எனச் சொல்லிய ஜூலியா, பொண்ணுங்களுடன் பேசுவதற்கான ஐடியாக்களையும் சொல்லிக் கொடுத்தார். அடியேனும் ஒரு தற்காலிய யூசர் நேம், பாஸ்வேர்ட்டை உருவாக்கி சாட் ரூமினுள் நுழைந்தேன். எப்படி நம்ம வலையில் விழ வைக்கலாம் என நினைத்த எனக்கோ சாருநிவேதிகா பற்றிய நினைப்பு மனதில் வர; இந்த சாட் ரூம்கள் பற்றி அலசிப் பார்த்தால் எப்படி இருக்கும் எனும் ஆவல் மேலிடவே மீண்டும் ஜூலியாவைத் தொடர்பு கொண்டேன்.
"தமிழ் மொழியில் தமிழர்களால் நடாத்தப்படும் சாட் ரூம்கள் பற்றி அறிய வேண்டுமானால் நீ மலேசியாவினை மையமாகக் கொண்டு இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் தமிழ்----- சாட் ரூமில் உள்ள யாரையாச்சும் தொடர்பு கொள்ள வேண்டும்" என ஆலோசனை கொடுத்து, தொடர்பு கொள்வதற்கான ஸ்கைப் (Skype) முகவரியினையும் கொடுத்தார் ஜூலியா. நானும் அங்கே உள்ள முரளி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பிடித்து ரகசியங்களைச் சொல்லத் தயங்கிய முரளி பின்னர் ஜூலியாவின் அழைப்பினைத் தொடர்ந்து மெதுவாக திடுக்கிடும் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். "தம் சாட் ரூமின் நோக்கம் பெண்களை மடக்கி எம் வலையில் விழ வைத்து அனுபவித்து மகிழ்வது தான்” என்று பச்சையாகப் பேசினார். அப்போ நான் கேட்டேன்! "எப்படி பொண்ணுங்களை மடக்குவீங்க என்று? "
"முதலில் இங்கே சாட் ரூமிற்கு வரும் தமிழ் நண்பர்கள் பொது வெளியில் பெண்களோடு பேசத் தொடங்குவார்கள். பின்னர் அவர்களோடு பிரைவேட் சாட்டிங்கிற்குப் போனதும் மெது மெதுவாக ஸ்கைப் முகவரியினையோ அல்லது பேஸ்புக் முகவரியினையோ கேட்பார்கள். திருமணமான பெண்கள், கணவன் வெளியூரில் உள்ள பெண்கள் தான் பொதுவாக இந்தச் சாட் ரூம்களை நாடுவதால், வீட்டில் மாட்டிக்காது தப்பிக்கும் நோக்கில் சாட் பண்ணிய HISTORY இனை அழிப்பது முதல், கணியில் ஒரு விபரமும் சேமிக்காது கணவனிடமிருந்து தப்புவதற்கான வழி முறைகளையும் முதற் கட்டமாகச் சொல்லிக் கொடுப்போம் என்று கூறினார் முரளி. முதல் நாள் சாட்டிங்கில் பொதுவான விடயங்களைப் பேசியதும் அடுத்த நாள் சாட்டிங்கில் மெது மெதுவாகப் படங்களை அனுப்பத் தொடங்குவோம்.
www.thamilnattu.com
முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம். அதற்கும் சாதகமாக இதயம் படம் மறு பக்கமிருந்து கிடைத்தால் அடுத்த நொடியே முத்தம் கொடுக்கும் கார்ட்டூன் படங்களை அனுப்புவோம். பின்னர் என்ன? நேரடியாகவே மேட்டர் பற்றிப் பேசத் தொடங்கிடுவோம். பொதுவாக இங்கே வரும் பெண்களிடம் நாம் கேட்கும் கேள்வி! "கணவன் அந்த விடயத்தில் எப்படி என்று?" கணவன் நன்றாகத் தான் தாம்பத்திய சுகம் கொடுக்கிறார் என்று பெரும்பாலான பெண்கள் பதில் கூறுவார்கள். "அப்போது குறுக்கிட்ட நான்; அப்படீன்னா அவங்க ஏன் சாட் ரூமை நாடனும்? எனக்குப் புரியாத புதிராக இருக்கிறதே என்று கூறினேன்.
தனக்கும் புரியாத புதிராகத் தான் இந்த விடயம் இருப்பதாக கூறினார் முரளி. ஒரு வேளை நாகரிக மோகத்திலும் வரலாம் என்று கூறினார். பசுவிற்குத் தெரியாமலே பாலைக் கறக்கிற ஜாதி தானே நாம என்று கூறிய முரளி; தாம்பத்திய உறவினைப் பற்றிப் பேசத் தொடங்கி, கணவனின் அன்பினைப் பற்றி அலசும் நாம், பின்னர் நேரடியாகவே போன் செக்ஸ் பத்திப் பேசத் தொடங்கிடுவோம். பொண்ணுங்களும் அந்த நிமிட சுகத்திற்காகப் போன் செக்ஸ் பண்ண ஒத்துழைப்பாங்க! இது நம்மைப் போன்றோருக்கு ஜாலி தானே எனக் கூறினார் முரளி. பெண்களோடு பேசத் தொடங்கும் போது நாம் செய்கின்ற முதல் வேலை, அதனை ரகசிய மென் பொருட்கள் மூலமாக ஒலிப்பதிவு செய்வது தான் என்று கூறினார்.
"அப்படி ஒலிப்பதிவு செய்து வைத்தால் தானே நாம அவங்களை நேரில பார்த்துப் பேசி. அவர்கள் உடல் உறவிற்கு மறுத்தாலும் கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட முடியும் என்று கூறினார் முரளி." ஒலிப்பதிவுகள் ஏதாவது இருந்தால் கொடுக்க முடியுமா என்று கேட்டதும் மூன்று மாதிரிக்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார் முரளி. போன் செக்ஸ் என்பது ஆங்கிலேயர்கள், மேலைத் தேச நாட்டவர்களிடம் மிகவும் பிரபல்யமானது எனவும், முகம் தெரியாமல் ஒருவரை ஒருவர் நினைத்து தொலைபேசி மூலமாக பேசிப் பேசி இன்பம் காண்பது தான் போன் செக்ஸ் என்றும் இந்த மாதிரி நடவடிக்கைகளுக்கு தாம் ஸ்கைப்பினைத் தான் பயன்படுத்துவோம்" என்றும் கூறினார் முரளி.
நம்மளோட சாட் ரூம் மலேசியாவில இருந்தாலும், இலங்கை இந்தியப் பெண்கள் தான் அதிகமாக நம்ம சாட் ரூமுக்கு வருவாங்க. இலங்கை இந்தியாவில் உள்ளோர் தமக்கு விருப்பமான நண்பர்களோடு உரையாடித் தொலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, தாம் ரகசியமாகச் சாட் ரூமினைக் கண்காணித்து அங்கே பரிமாறப்படும் தகவல்களை, சேமிப்பதோடு, ஒலிப்பதிவும் செய்து வைத்துக் கொண்டு பின்னர் பெண்களோடு பேசத் ஆரம்பிப்போம். அப்போது எம் வலையில் யாராவது விழவில்லை என்றால் உடனடியாக இந்த ஒலிப் பதிவுகளை பாலியல் தளங்களில் பரப்பிவிடுவோம் எனக் கூறி அச்சுறுத்துவோம். இத் தளங்களுக்கு வரும் பெண்களில் பலருக்கு உள் மனதில் விருப்பம் இருந்து வீட்டிற்குப் பயந்து எம்மோடு வர மறுத்தாலும் ஒலிப்பதிவுக்குப் பயந்து ஒத்துக் கொள்வார்கள் எனக் கூறினார் முரளி.
அழகான உடலமைப்புக் கொண்டோரை நாம் நண்பர்கள் சிலர் ருசித்து விட்டு, எம் ஏனைய நண்பர்களுக்கும் ருசி பார்க்க மிரட்டிப் பணியவைத்து அனுப்பியிருக்கிறோம் எனவும் கூறினார் முரளி! "மலேசியாவில் இருக்கும் நீங்கள் இலங்கை - இந்திய நாடுகளில் வாழும் பெண்களை எப்படி அணுக முடியும்?" எனக் கேட்ட போது; "தம் நண்பர்கள் இலங்கை இந்தியாவில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தம் வேலை முடித்ததும் எமக்கான பணத்தினை அனுப்பி வைப்பார்கள் எனக் கூறினார் முரளி. நாம் மலேசியா, மற்றும் சிங்கப்பூரில் எம் வலையில் விழுவோரை மாத்திரம் கண்காணிக்கிறோம் எனக் கூறினார் முரளி! இந்த சாட் ரூமில் மிகவும் பிரபலமான பாடல் என்ன தெரியுமா என்று கேட்டு ஒரு பாட்டுச் சொன்னார் பாருங்க. "ஆனந்தம் ஆனந்தம் பாடும்! மனம் அடுத்தவன் மனைவியை நாடும்!" என்ன கொடுமை இது என எனக்குள் நானே திட்டித் தீர்த்தேன்.
தமது சாட் ரூம்களில் பகலில் மதிய வேளையில் நாற்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் எனவும், இரவில் அறுபது முதல் எழுபது வரையான நண்பர்கள் வந்து கூடுவார்கள் எனவும் கூறிய முரளி, இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய வெளி நாடுகளில் தமிழில் இது போன்று பல சாட்டிங் தளங்கள் உள்ளதாகவும் அங்கும் இத்தகைய செயல்களே நடப்பதாகவும் கூறினார். பொது இடத்தில் சாட் பண்ணுதல், பாடல் பாடி மகிழுதல் முதலிய செயல்களில் தொடங்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பின்னர் தனி நபர் சாட்டிங்கினூடாக (Private Chat) அந்தரங்க விடயங்களைப் பேசத் தொடங்கியதும் சூடு பிடிக்கத் தொடங்கி விடும் என்றார். சாட் பண்ணி கணவனிடம் அகப்பட்ட பெண்களில் சிலரது வாழ்க்கை விவகாரத்து எனும் நிலையினை அடைந்திருப்பதாகவும் வருத்தத்தோடு கூறினார்.
தம்மைப் போன்ற பலருக்கு பணம் தேவை! அதற்காக இப்படிச் செய்வது தவிர்க்க முடியாது என்றவரிடம், ஏன் வேறு ஆன்லைன் வேலைகளைச் செய்து சம்பாதிக்க முடியாதா எனக் கேள்வி கேட்டேன். அவரோ நோகாமல் நிறைய உழைக்கனும் என்றால் இந்த மாதிரியான வழிகள் தான் பயன் தரும் என கொஞ்சம் கூட ஈவிரக்கம் இன்றிப் பதிலளித்தார். அவர் வழங்கிய தகவல்களுக்கு நன்றி கூறும் போது, குறுக்கிட்ட அவர், என்னமோ போங்க! நீங்க இந்த தகவல்களையெல்லாம் சேகரித்து ஆதாரப்படுத்தி எழுதும் போது, சில மானங்கெட்ட ஈனச் செயல் புரியும் இணையத் தளங்கள் உங்களின் நாற்று வலையில் வெளியான பதிவுகளை அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி வெளியிட்டு மகிழ்கிறார்களே! முதல்ல அதனைக் கண்டியுங்க என ஆதங்கத்தோடு சொல்லி விடை பெற்றார் முரளி!
நிரூபனின் நாற்று www.thamilanttu.com
இப்படியும் நம் சமூகத்தில் சிலரா என வருத்தத்துடன் இவ் விடயத்தினைப் பதிவாக எழுதுவது தொடர்பில் நண்பர்களுடன் உரையாடிப் பார்த்தேன். பலரது வேண்டுகோள் ஒலிப் பதிவுகளை இணைத்து எம் கலாச்சார சீரழிவினையும், தனி நபரை அவமதிக்கும் செயலையும் செய்ய வேண்டாம் எனும் அன்புக் கட்டளையினைத் தாங்கி வந்த காரணத்தினால் ஒலிப்பதிவுகளை இப் பதிவில் இணைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியூரில் இருக்கும் கணவன்மார் யாருக்காவது உங்கள் மனைவி மீது சந்தேகம் ஏற்படின் அவர் பயன்படுத்தும் கணினியினைக் கண்காணிக்கும் மென் பொருட்களை நிறுவலாம். பேஸ்புக், மற்றும் ஏனைய சாட்டிங் தளங்களை உங்கள் வீட்டுக் கணினி மூலம் பார்க்க முடியாதவாறு Block பண்ணும் மென் பொருட்களை நிறுவலாம்.
நிரூபனின் நாற்று www.thamilnattu.com
கணவன்மாரும் தம் மனைவியின் மீது சந்தேகம் வரின் தம் வீட்டு இணைய உலவியில் உள்ள Browsing History இனைச் பரிசோதித்துப் பார்க்கலாம். ஆனால் கணவன் மார் மனைவிக்குத் தெரியாமல் செய்தால் ஒன்னுமே பண்ண முடியாதுங்க! நேராக கோர்ட் வாசலுக்குத் தான் போக முடியுமுங்க. ஹி...ஹி..!
நன்றி: பதிவரும் சாட் ரூம் உரிமையாளருமான ஜூலியா மற்றும் முரளி!
|
84 Comments:
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...
ஒரு விழிப்புனர்வு பதிவு
என்ன சொல்லுறது நிரூ.. சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிடுறவங்களை ஒண்ணும் பண்ண முடியாதே?
திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!!!.
இப்படி கூட நடக்குமா??? தகவலுக்கு நன்றி மாப்ள TM 3
இப்பத்தான் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரி "செல்லமே, செல்லமே" என்று கொஞ்சப் பழகிட்டு வரேன். அதற்குள்ள இந்த மாதிரி பேதி கொடுக்கறீங்களே நிரூபன், இது உங்களுக்கே நியாயமாப் படுதுங்களா?
@தமிழ்வாசி - Prakash
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...
//
நன்றி சகோ.
@K.s.s.Rajh
ஒரு விழிப்புனர்வு பதிவு
//
புணர்வா இல்லே புனர்வா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன கொடுமை - இப்படீல்லாம் ஒரு பொழப்பு - பகிர்வுக்கு நன்றி
உசார் உசார் மக்களே
@ஜ.ரா.ரமேஷ் பாபு
என்ன சொல்லுறது நிரூ.. சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிடுறவங்களை ஒண்ணும் பண்ண முடியாதே?//
ஆம் நண்பா, என்ன பண்ண முடியும்?
தாமாக அழியனும் என்று முடிவெடுத்தால் ஒன்றும் பண்ண முடியாது தானே.
@யோகன் பாரிஸ்(Johan-Paris)
திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!!!.
//
உண்மை தான் ஐயா.
@சசிகுமார்
இப்படி கூட நடக்குமா??? தகவலுக்கு நன்றி மாப்ள TM 3
//
நடக்குது, பல இடங்களில!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@DrPKandaswamyPhD
இப்பத்தான் நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரி "செல்லமே, செல்லமே" என்று கொஞ்சப் பழகிட்டு வரேன். அதற்குள்ள இந்த மாதிரி பேதி கொடுக்கறீங்களே நிரூபன், இது உங்களுக்கே நியாயமாப் படுதுங்களா?//
என்னய்யா பண்ண முடியும்! காலம் கலிகாலம் என்று சொல்லுறாங்களே! நாம தான் கொஞ்சம் உஷாரா இருக்கப் பழகிக்கனும்!
@மனசாட்சி
என்ன கொடுமை - இப்படீல்லாம் ஒரு பொழப்பு - பகிர்வுக்கு நன்றி
உசார் உசார் மக்களே//
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோ.
வணக்கம் நிரூபன்!
ஹா ஹா என்னையா போட்டு கொடுக்கிறியா..?
அதெப்படி கணவன்மார் அதையே செய்தால் கோர்ட்டுக்கு போகனும்.. அவங்களுக்கு எடுத்து கொடுக்கிறீங்க..!!?
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
ஹா ஹா என்னையா போட்டு கொடுக்கிறியா..?
//
மாமோய் யாரை மாமா போட்டுக் குடுக்கிறேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அது சரி இந்த ஆராச்சியில எத்தனை சாட் ரூமுக்கு போனீங்க..?
@காட்டான்
அதெப்படி கணவன்மார் அதையே செய்தால் கோர்ட்டுக்கு போகனும்.. அவங்களுக்கு எடுத்து கொடுக்கிறீங்க..!!?//
ஏதோ நம்மால முடிஞ்சது மாம்ஸ்!
சீக்கிறமா தாலிய கட்டு.. இந்த வயசே அதிகம்யா..!!:-)
ம்ம்ம்...என்னமோ போங்க பாஸ்! எல்லாமே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்! ரூல்ஸ் போட்டு.... கண்காணித்து...இதுவா வாழ்க்கை?
ஆணாதிக்கவாதி நிரூபன் ஒழிக!! ஹி ஹி
உங்கள் தளம் கூகிள் க்ரோமில் திறக்குதில்ல (இப்போதான்) நண்பா...கொஞ்சம் பாருங்க!
@காட்டான்
அது சரி இந்த ஆராச்சியில எத்தனை சாட் ரூமுக்கு போனீங்க..?
//
குத்து மதிப்பா ஒரு நாலைஞ்சு சாட் ரூமுக்குப் போயிருப்பேன்.
@காட்டான்
சீக்கிறமா தாலிய கட்டு.. இந்த வயசே அதிகம்யா..!!:-)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நெசமாத் தான் சொல்லுறீங்களா?
அதற்குப் பொண்ணு ஓக்கே சொல்லனுமே;-)))
@ஜீ...
ம்ம்ம்...என்னமோ போங்க பாஸ்! எல்லாமே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்! ரூல்ஸ் போட்டு.... கண்காணித்து...இதுவா வாழ்க்கை?
//
இதுவும் சரி தான் பாஸ்!
கண்காணித்து எப்பவுமே நிம்மதியற்று வாழ்வதுவா வாழ்க்கை! உணர்ந்து தெளிய வேண்டியதல்லவா வாழ்க்கை!
@காட்டான்
ஆணாதிக்கவாதி நிரூபன் ஒழிக!! ஹி ஹி
//
நல்லாத் தான் வத்தி வைக்கிறாரு மாம்ஸ்!
இன்றய உலகில் தவிர்க்க முடியாத வளர்சியில் வரும் பாதிப்பு சம்பந்தப்பட்டவர்கள்தான் திருந்தனும் இதை எதைக்கொண்டும் கட்டுப்படுத்த முடியாது!!
இவ்வளவை சொல்லி கொடுப்பவர்கள் கணனியை ஏமாற்றவும் சொல்லி கொடுப்பார்கள்!!
முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம்.// இதுதான் தூண்டில் போடுறதா?
"அப்படி ஒலிப்பதிவு செய்து வைத்தால் தானே நாம அவங்களை நேரில பார்த்துப் பேசி. அவர்கள் உடல் உறவிற்கு மறுத்தாலும் கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட முடியும்// அடப்பாவிகளா?
எல்லாம் கலிகாலத்தின் உச்சம் என்னமோ குடும்பம் என்ற அமைப்பு இப்போது அதிகம் சந்திசிரிக்கனும் என்று மட்டும் பலர் இப்படி அலைகின்றார்கள்.
அழகான உடலமைப்புக் கொண்டோரை நாம் நண்பர்கள் சிலர் ருசித்து விட்டு, எம் ஏனைய நண்பர்களுக்கும் ருசி பார்க்க மிரட்டிப் பணியவைத்து அனுப்பியிருக்கிறோம் எனவும் கூறினார் // இவங்களை கொண்டுபோய் கட் பண்ணனும். நான் நாக்கை சொன்னேன், அப்பதானே இன்னொரு பொண்ணு கூட பேச மாட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
@காட்டான்
சீக்கிறமா தாலிய கட்டு.. இந்த வயசே அதிகம்யா..!!:-)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நெசமாத் தான் சொல்லுறீங்களா?
அதற்குப் பொண்ணு ஓக்கே சொல்லனுமே;-)))
November 16, 2011 4:15 PM
ஹா ஹா ஹா சத்தியமா உன்ர பதிவ படிக்கிற எந்த பெண்னும் உனக்கு கழுத்த நீட்ட ஓக்கே சொல்ல மாட்டாள்..!!??
பின்ன எல்லாருக்கும் முன்னே நீ அவங்கள "மாம்பழமே"ன்னு கூப்பிடுவாயாமே உண்மையா? செல்லம் பொழியுறாராம் செல்லம்..!அடிங்!!
ஐயோ தனிமரம் வந்துட்டான் இனி இங்கின நான் நிண்டா பிரச்சனையாகிடும் போட்டு வாரேன்யா..!!! :-)
இணையத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதோ... இனியும் எத்தனை பெண்கள் ஏமாறபோகிறார்களோ....
அவரவர் பாதுகாப்பு அவரவர் கையில் தான். ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளையே சுத்திட்டிருந்தா இந்த மாதிரி பிரச்சனைகள் அண்டாது இல்லையா :-(
பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு தம்பி
நன்றிகள்
-ஆமினா முஹம்மத்
@ஜீ...
உங்கள் தளம் கூகிள் க்ரோமில் திறக்குதில்ல (இப்போதான்) நண்பா...கொஞ்சம் பாருங்க!
//
நண்பா, தங்கள் தகவலுக்கு மீண்டும் நன்றி,
நேற்று இரவு டெம்பிளேட்டில் பதிவின் தலைப்பில் டிசைனிங் கொடுத்தேன்.
அத விளைவு தான் இது என்று நினைக்கிறேன்.
தற்போது பழைய டெம்பிளேட்டிற்கு மாற்றியிருக்கேன்.
இப்போ பாருங்க
@காட்டான்
இன்றய உலகில் தவிர்க்க முடியாத வளர்சியில் வரும் பாதிப்பு சம்பந்தப்பட்டவர்கள்தான் திருந்தனும் இதை எதைக்கொண்டும் கட்டுப்படுத்த முடியாது!!
இவ்வளவை சொல்லி கொடுப்பவர்கள் கணனியை ஏமாற்றவும் சொல்லி கொடுப்பார்கள்!!
//
ஹே..ஹே...
அதுவும் சொல்லிக் கொடுக்கிறார்களே என்று சொல்லியிருக்கிறார் முரளி!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
முதலில் பூக்களின் படங்களை அனுப்பிப் பார்ப்போம், அதற்குப் பொருத்தமான பதில் பெண்கள் பக்கமிருந்து வந்தால், அதற்கு அப்புறமா உணர்ச்சியினைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் இதயப் படத்தினை அனுப்பிப் பார்ப்போம்.// இதுதான் தூண்டில் போடுறதா?
//
ஆமா பாஸ்!
@தனிமரம்
எல்லாம் கலிகாலத்தின் உச்சம் என்னமோ குடும்பம் என்ற அமைப்பு இப்போது அதிகம் சந்திசிரிக்கனும் என்று மட்டும் பலர் இப்படி அலைகின்றார்கள்.
//
ம்! என்ன நாம என்ன செய்ய முடியும்?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இவங்களை கொண்டுபோய் கட் பண்ணனும். நான் நாக்கை சொன்னேன், அப்பதானே இன்னொரு பொண்ணு கூட பேச மாட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@காட்டான்
ஹா ஹா ஹா சத்தியமா உன்ர பதிவ படிக்கிற எந்த பெண்னும் உனக்கு கழுத்த நீட்ட ஓக்கே சொல்ல மாட்டாள்..!!??
பின்ன எல்லாருக்கும் முன்னே நீ அவங்கள "மாம்பழமே"ன்னு கூப்பிடுவாயாமே உண்மையா? செல்லம் பொழியுறாராம் செல்லம்..!அடிங்!!
//
அண்ணே எனக்கு வடிவான பொண்ணு கிடைச்சிடும் என்று உங்களுக்கு ஆத்திரம் வருகிறது போல இருக்கே!
பொறுமை! பொறுமை!
அது அவாவிற்கு பிடிக்காமால போகும்! நீங்க வேண்ணா பாருங்க!
@காட்டான்
ஐயோ தனிமரம் வந்துட்டான் இனி இங்கின நான் நிண்டா பிரச்சனையாகிடும் போட்டு வாரேன்யா..!!! :-)//
ஹே...ஹே..
ஏன்னே உங்களுக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறா;-))))
என்னை சாட்டுல காதல் செய்யும் ஜெயஜோதி மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ...?
@ஆமினா
இணையத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதோ... இனியும் எத்தனை பெண்கள் ஏமாறபோகிறார்களோ....
அவரவர் பாதுகாப்பு அவரவர் கையில் தான். ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ளையே சுத்திட்டிருந்தா இந்த மாதிரி பிரச்சனைகள் அண்டாது இல்லையா :-(
பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு தம்பி
நன்றிகள்
-ஆமினா முஹம்மத்//
உங்களின் மேன்மையான கருத்துக்களுக்கு நன்றி அக்கா!
ஆனாலும் இப்போதும் சாட் ரூம்களில் பலர் வலம் வருகிறார்களே;-)))
ஆண்கள்கூட பெண்கள் பெயரில் FB ல் சாட் செய்வது(ஏமாற்றுவது) அதிகரித்துள்ளது.உஷாரய்யா உஷாரு.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இவங்களை கொண்டுபோய் கட் பண்ணனும். நான் நாக்கை சொன்னேன், அப்பதானே இன்னொரு பொண்ணு கூட பேச மாட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
November 16, 2011 4:37 PM
ஹா ஹா சாட் செய்ய பேசதேவையில்லங்கோ..!! "அத" கட் பண்ணினா சரிங்கோ!!!! நான் நெட் கனெக்சன சொன்னேங்க..:-)
@MANO நாஞ்சில் மனோ
என்னை சாட்டுல காதல் செய்யும் ஜெயஜோதி மாதிரி ஆளுங்களுக்கு கல்யாணம் ஆகியிருக்குமோ...?//
ஆகா உங்களையும் வலையில விழுத்திட்டாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@விச்சு
ஆண்கள்கூட பெண்கள் பெயரில் FB ல் சாட் செய்வது(ஏமாற்றுவது) அதிகரித்துள்ளது.உஷாரய்யா உஷாரு.
//
அட இது வேறையா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நிரூபன் said...
@காட்டான்
ஐயோ தனிமரம் வந்துட்டான் இனி இங்கின நான் நிண்டா பிரச்சனையாகிடும் போட்டு வாரேன்யா..!!! :-)//
ஹே...ஹே..
ஏன்னே உங்களுக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறா;-))))
November 16, 2011 4:40 PM
ஹி ஹி அப்பிடியெல்லாம் இல்லை ஏன் "பொல்ல" கொடுத்து அடி வாங்குவான்னு பார்த்தேன்..!!-:)
நிரூபன் நல்லவர் ஆச்சே? அவர் எதுக்கு சாட்க்கு போனாரு?
@சி.பி.செந்தில்குமார்
நிரூபன் நல்லவர் ஆச்சே? அவர் எதுக்கு சாட்க்கு போனாரு?
//
அண்ணே இது உங்களுக்கே நல்லா இருக்கா?
நான் எப்போவாச்சும் சொல்லியிருக்கேனா?
நான் எப்போதாவது நல்லவன் என்று
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//தற்போது பழைய டெம்பிளேட்டிற்கு மாற்றியிருக்கேன்.
இப்போ பாருங்க//
OK!! :-)
:((((((((((((((((
உண்மையில் அதிர்சியான செய்திகள் தான்
இன்று என் வலையில்
அஜித் : THE REAL HERO
மச்சி, நீ அந்த ஒலிப்பதிவு கிளிப்புக்களையும் போட்டிருக்காலாம்! ஹி ஹி ஹி ஹி ஹி!!!!
மச்சி, நடிகர் விசு, தம்பி பொண்டாட்டி படத்தில் சொல்லுவார்,\
“ வீட்டுல நல்ல காப்பி கெடைச்சா அவனவன் எதுக்கு கடையில காப்பி குடிக்கப்போறான்/”
அப்டீம்பார்! அதுபோல, வீட்டுல கணவன் சரியான சாப்பாடு போட்டால், எந்த மனைவியும் இப்படி சேட்டிங்கில் வரமாட்டாள் என்பது எனது நம்பிக்கை!
உளவியலும்கூட!
விடலை ராஜ்ஜியம்...
வேறென்ன சொல்ல..போன பதிவுல சொன்னது தான்...
சீக்கிரம் டும் டும் டும் டும் பண்ணுங்க...
சரியா போச்சு...
இது போன்ற விழிப்புணர்வு பகிர்வு அவசியம் பாஸ்... உணர்ந்து அடுத்தவரின் வாழ்க்கையோடு விளையாடாமல்.. உனக்கென வாழ்க்கை இறைவன் கொடுத்திருக்கிறான்.. அதை உணர்ந்தாலே தவறுகள் குறையும்....
எல்லாம் கலிகாலம், என்ன பண்றது?
இதெல்லாம் புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சி நடந்தா சரி .கானல்நீரை நம்பி ஏமாருவோருக்கு நல்ல படிப்பினை
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_14.html
இந்த பதிவில் கூட வலைதளத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரைப்பற்றி உண்மைச்சம்பவம் சகோ வெளியிட்டிருந்தார்... இது போன்ற சம்பவங்கள் ஏராளம்... இப்பொழுதெல்லாம் காவல் துறையின் பார்வை வலைதளத்திற்கு முக்கியதுவம் தர துவங்கிருக்கின்றனர்... இருந்தாலும் நல்லவர்கள் உசாராக இருப்பது நலமே... நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி பாஸ்.
என்ன கொடுமை நிரூபன்! பலர் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
@காட்டான் said...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இவங்களை கொண்டுபோய் கட் பண்ணனும். நான் நாக்கை சொன்னேன், அப்பதானே இன்னொரு பொண்ணு கூட பேச மாட்டாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹா ஹா சாட் செய்ய பேசதேவையில்லங்கோ..!! "அத" கட் பண்ணினா சரிங்கோ!!!! நான் நெட் கனெக்சன சொன்னேங்க..:-/////
மாம்ஸ் அப்ப நாங்கள் எல்லாம் எதிர்காலத்தில் கலியாணம் கட்டும் போது
இண்டநெட்டையும் கட் பண்ணனுமா?
என்னவெல்லாம் நடக்குது!
பகிர்வுக்கு நன்றி.
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி!
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது திருமணம் முடிந்து குடும்பம் நடத்தாமல் பணம் சம்பாதிக்க வெளி நாடு சென்றால் .. இப்படியும் பல அதிர்ச்சிகள் காத்திருப்பது பெரிய அதிர்ச்சி பெண்களாய் மடக்க நினைபவனுக்கு அது ஒன்றுதான் வேலை என்று ஈரம் படத்தில் வசனம் வரும் அது உண்மையான வசனம் ..இதை நினைத்து வருத்தம்தான் பட வேண்டும் அறிவியல் வளர்ச்சியில் தீமைகளும் அதிகம் மறுபதற்கில்லை அருமையான பதிவு .. வாழ்த்துக்கள்
அன்பு சகோ நலம்தானே
சமூக அக்கறையும் பிரஞ்யையும் விழிப்புணர்வுமே உங்களின் தனித்துவம் , அதை இந்த பதிவு மறு ஒரு முறை நிருப(ன்)னப்படுத்தி இருக்கிறது.
கம்பீரம்..............
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது!!!.//
வணக்கம்.
நல்ல விழிப்புணர்வுப் பதிவு நிரூ..அவசியமான விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள்.
நீங்க பேசுன ஒலிப்பதிவு இல்லியா?
இவ்வளவு நடக்குதா?
செங்கோவி said...
//நீங்க பேசுன ஒலிப்பதிவு இல்லியா?//
பார்ரா... அவுரு ஒலிப்பதிவு கெடயாது, ஆனா ஒளிப்பதிவு இருக்காம்..
கேடுகெட்ட உலகமய்யா.....
இப்பிடியெல்லாம் நடக்குமா நிரூ.எங்கேயாவதுதான் ஒன்றிரண்டு நடக்குமே தவிர எல்லோருமே இதுபோலிருக்கமுடியாது !
என்னமோ சப்பைக்கட்டு கட்டறீங்க, சரிதான். நாமதான் உஷாரா இர்க்கோணும் போல.@நிரூபன்
அதிர்ச்சியாக இருக்கிறது
copy & past பன்றவங்க
இந்தப் பதிவை மாத்திரம் தாராலமா பண்ணுங்க என்று அறிக்கைவிட்டிருக்கலாம் நிரூபன்....
( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சுரனையற்றவர்கள்...பண்ணுவாங்களே....கொப்பி..பேஸ்ட் டைத்தான் சொன்னேன்....)
பல அப்பாவி ( ???) பெண்களின் வாழ்க்கை சீரழிவதை தடுக்க விழிப்புணர்வை தூண்டும் சின்ன முயற்சிதான்....
அந்த அவசர நவீன காலத்தில்....
கணவன் மனைவி தேவைகளை இருவரும் சரிவரப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்தான் இதற்கு முழுக் காரணமும்....பொறுப்பும் என்பேன்....
அதிர்ச்சியான தகவல். படித்து இப்படியெல்லாம் நடக்குதா என்று அறிந்து அதிர்ந்தேன்.
கண்டிப்பா இந்தப் போஸ்டை காப்பி பேஸ்ட் பண்ண நீங்க உரிமை வழங்கி இருக்கனும். அப்பதானே பலருக்கு (கெட்டுக் குட்டிச் செவுறா போக இருக்கிற) இச்செய்தி சென்றடையும். ஒரு விழிப்புணர்வும் வரும்.
பகிர்வுக்கு நன்றி.
உங்கள் புலணாய்வு கட்டுரைக்கு வாழ்த்துக்கள். இணையத்தில் இப்படியும் கொடியவர்கள் உலவுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள இயன்றது. ஆனால் இந்த மாதிரியுள்ள செயல் புரிபவர்களும் இதில் மாட்டுபவர்களும் ஒரே போல் குற்றவாளிகளே. இவர்களுக்கு மருத்துவ- உளவியல் மருத்துவம் கொடுத்தால் மட்டுமே குணமடைவர். இது ஹார்மோன் செயலாக்கத்தின் சில தப்பிதங்களும் அதை தொடர்ந்துள்ள செயல்பாடுகளுமே.
Superb awarness msg... indha post news papper la publish aana tha ellaraiu reach aagu... athuku edhavathu panunga please...
Life is beautiful, the way it is...
Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills
மிகவும் தேவையான விழிப்புணர்வு மிக்க பதிவு.. இதை வாசிக்கும் பொழுதே மனதிற்குள் ஏதோ செய்கிறது நிரூபன். பாஸ், நமக்கு கலியாணம் அவசியமா எண்ணு இன்னுமொருக்கா ஜோசிப்பம். ஆணியே புடிங்க வேணாம்.
இப்படியெல்லாமா நடக்குது??? அவ்வ்வ் ... நான் ரொம்ப நல்லவனா இருக்கேனே?
நமக்கு சாட்ரூம்களில் சுத்தமா அனுபவம் இல்லயே. இப்பொழுதே ஏதாவது ஒரு தமிழ் சாட் ரூமை தேடிக் கண்டுபிடிக்கணும். என்னதான் நடக்குதுன்னு பார்க்க வேணாம்? ;)
நிரூ ஹெல்ப் மீ. ...
இப்படி கூட மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது...
பகிர்வுக்கு நன்றி..
Post a Comment