மனதினுள் ஒரு படபடப்பு, என் உள்ளத்தினுள் ஒரு குறு குறுப்பு. இன்றைக்கு எப்படியாச்சும் அவளிடம் போன தடவை கொடுத்த கடிதத்தில் சொல்லியதைப் பற்றி கேட்டுப் பார்த்திடனும். "அவள் அதற்கு ஒத்துக் கொள்வாளா" என மனம் ஏங்கியது. என்ன இருந்தாலும் நான் கட்டிக்கப் போகும் என் காதலி அல்லவா இவள் என அங்காலாய்த்தவாறு அவள் வருகைக்காய் காத்திருந்தேன் நான். கடற் கரையோரம் கனிந்த நல் காற்று உடலைத் தழுவ, அருகே அவள் இரு கைகள் என் உடலைத் தழுவாதா எனும் ஏக்கம் என்னுள் எழுந்தாட காத்திருந்தேன் நான். "ஓ! தூரத்தில் யாரது? குடையோடு! அவள் தானா! அடடா! நான் எதிர்பார்த்த மாதிரியே குடையோடு வருகிறாளா?" சிந்தையில் ஒரு கணம் சுய நினைவற்று சில்லென வீசிய காற்றினால் வருடப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன்!
|