நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக......
எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை.
எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை.
|