ஈழத்தின் ஒரு ஓரத்தில் அடிமைகளாக அடக்கு முறையாளர்களின் கால்களின் கீழ் சிக்கிச் சிதைந்து வேரோடு அழிந்து விடும் எனக் கருதிய தமிழனத்திற்கு வழி காட்டியாகப் பிறந்தவர் திரு. வே.பிரபாகரன். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைகளும்,அநீதிகளும் சிங்கள வல்லாதிக்க வாதிகளால் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது எனும் உண்மையினையும்; தமிழன் எனும் இனம் அடக்கு முறையாளர்களின் கீழ்ப் பணிந்து வாழும் அடிமை இனம் அல்ல என்பதனையும் உலகறியச் செய்த பெருமை அவரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அவ் அமைப்பினை வழி நடத்திய தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களையுமே சாரும்.
|