ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக கள முனைச் செய்திகளை நேரடியாகத் தொகுத்து வழங்கும் நோக்கில் தமீழ விடுதலைப் புலிகள் நேரடி ஒலிபரப்பினை, முழு நேர போர்க் காலச் சிறப்பு வானொலி ஒலிபரப்பினைச் செய்த காலப் பகுதி அது. ஆம் 1999ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, கள முனைச் செய்திகள் புலிகளின் குரல் வானொலியின் போர்க் காலச் சிறப்பு ஒலிபரப்பினூடாக உடனுக்குடன் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன தான் சிறப்பு ஒலிபரப்பினூடாகச் செய்திகளைக் கேட்டாலும், மனம் அடங்குமா? இரவாகி விடிந்து எழும்பும் போது நள்ளிரவில் என்ன நடந்திருக்கும் என்பதனை அறிய மனம் ஆவல் கொண்டது.
|