என் சிந்தனையை சிறகடித்த சிட்டுக்கள் - சுகந் தரும் ரணங்கள்!
அவள் கையிலிருந்து லெட்டரும், தின் பண்டமும், என் கைக்கு தாவியது. கொஞ்சம் வெட்கப்பட்டு, லெட்டரை என் கையினுள் திணித்து விட்டு, ஓடி விட்டாள். நான் கொஞ்ச நேரம் என்னை மறந்தவனாய் அக் காலத்தில் பேமஸான "உயிரே...உயிரே இது தெய்வீக சம்பந்தமோ" பாடலை மீட்டியவாறு கற்பனையில் மூழ்க ஆரம்பித்தேன். அப்போது அருகே வந்த நண்பன் கனியன், என்னைச் சுய நினைவிற்கு கொண்டு வந்தான். அந் நேரம் தான் கையில் ஆர்த்திகா கொடுத்த லெட்டர் இருக்கிறதே என்று உணர்ந்து லெட்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது என்னை கெடுத்த பெண்கள் தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
|