நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;
வீரியம் மிக்க விதைகளாக
விளைச்சல்களை அதிகரிக்கும்
பயிர்களைப் பயிரிட
அவர்கள் ஒவ்வோர் முறையும்
எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்
தாங்கள் புசித்த எலும்புத் துண்டுகளின்
எச்சில் நாற்றம் காயும் முன்னே
எங்களை விலை பேச
கைகளை உயர்த்தியபடி
தாம் கட்டி வைத்த
கோவணத்தை அவிழ்த்து
சால்வை எனப் பெயர் சூடி
பரிசளித்து மகிழ்கிறார்கள்!
|